திருக்குறள் : பொருட்பால்
அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்
திருவள்ளுவரின் குறள் 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
ஒரு நாட்டின் அரசன் நமக்கு நண்பனாக இருந்து, அவருடன் நாம் சேர்ந்து இருக்கும் காலத்தில் பண்பில்லாத அதாவது நல்ல குணம் இல்லாத செயல்களை செய்தால் அது நாட்டின் அரசனுக்கும் நமக்கும் கெட்ட பலன்களையே தரும். உதாரணமாக நண்பராக உள்ள ஒரு நாட்டின் முதலமைச்சருடன் நாம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட துறையச்சார்ந்த அதிகாரிகள் சம்பள உயர்வுக்காக கோரிக்கை வைக்க வருகின்றனர், அருகில் இருக்கும் நாம் சும்மா இருக்காமல் உங்கள் துறையில் இருப்பவர்கள் எப்பவுமே தூங்கிகொண்ட்டே இருப்பீர்களே உங்களுக்கு எதற்கு சம்பள உயர்வு என்று கேட்டால் அது நமக்கு மட்டும் கெடுபலனை தராமல் முதலமைச்சருக்கும் கெட்ட பெயரை வாங்கி கொடுக்கும்.
Gkural யூடியுப் சேனலின் உலகப்பொதுமறை விளக்க பணியில் திருவடி சரணம் ஐயாவுடன் , குரல் - உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம்.
Narration: Subhash Chander,
Website: http://voiceoversubhash.com
Email: voiceoversubhash@gmail.com