திருக்குறள் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
திருவள்ளுவரின் குறள் 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
நம்மைப் போலவே சிந்திக்கும் ஒருவரால் நம் மனக்கவலையை மாற்ற முடியாது. பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்திலும் கடவுளைக் காணும் அன்பு உள்ளவர்களிடம் சேர்ந்து, அவர் பாதம் பணிந்தால் மட்டுமே நம் மனக்கவலையை மாற்ற முடியும். எல்லா உயிர்களிடத்திலும் கடவுளை காண்பவனுக்கு கவலை என்பது வருவதே இல்லை. இதனாலே இவன் நமக்கு நிகரில்லாதவனாகவும், நம்மைவிட மேலான வனாகவும் , நம் கவலைகளை நீக்குபவனாகவும் இருக்கிறான்.
Gkural யூடியுப் சேனலின் உலகப்பொதுமறை விளக்க பணியில் திருவடி சரணம் ஐயாவுடன் , குரல் - உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம்.
Narration: Subhash Chander,
Website: http://voiceoversubhash.com
Email: voiceoversubhash@gmail.com